sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்

/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்


ADDED : பிப் 02, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நகர் புறநகர் பகுதிகளில் பெட்டிக்கடைகள்,பள்ளி கல்லூரி பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தராளமாக புழக்கத்தில் உள்ளன.

அருப்புக்கோட்டைக்கு தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்களில் புகையிலை பொருட்கள் இரவில் ஏற்றப்பட்டு அதிகாலையில் வந்து இறக்கப்படுகின்றன. பின்னர் அவை டூவீலர்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது.

இவற்றை விற்கும் குறிப்பிட்ட கடைகளில் கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாங்குகின்றனர். போலீசாரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக கடமைக்கு ஒரு சிலரை கைது செய்கின்றனர்.

அருப்புக்கோட்டையில் நேற்று டவுன் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக வீராச்சாமி தெருவை சேர்ந்த கருப்பசாமி, 50, திருச்சுழி ரோடு அருகே விஜயபாண்டி,54, ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.புகையிலை பொருட்களை விற்கும் முக்கிய ஏஜன்டுகள் மற்றும் பெரிய வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுத்தால் தான் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பழக்கம் குறையும். மாவட்ட போலீஸ் நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us