ADDED : செப் 29, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் பா.ஜ., தேசிய மொழிகள் பிரிவு, கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. தேசிய மொழிகள் பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமணி முன்னிலை வகித்தார்.
பா.ஜ., நகர தலைவர்கள் பிரேம ராஜா, ஜெமினி சுரேஷ் கலந்து கொண்டனர். மண்டல தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் ஐயப்பன் செய்திருந்தனர். இதில் 75 பயனாளிகள் பங்கேற்று சோதனை செய்ததில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றனர்.