ADDED : ஜன 20, 2026 05:52 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
தற்போது அரசு நடத்தும் குரூப் 2, 2ஏ-க்கான முதன்மை தேர்வுக்கு தயாராகும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மூலம் மாநில அளவிலான இலவச முழு மாதிரித் தேர்வுகள் ஜன. 24, 31 ஆகிய தேதிகளில் விருதுநகர் சூலக்கரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடக்கும். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/XWQtErDH6Vh2K3ej9 -ல் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக தெரிவிக்கலாம், என்றார்.

