/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா
/
பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா
ADDED : மே 08, 2025 01:59 AM

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த கயர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று கயர் குத்து திருவிழா நடந்தது.
இதில் பக்தர்கள் அலகு குத்தியும் அக்னி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பிகை திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணும் நிகழ்ச்சி நடந்தது.
நாளை தேரோட்டம் நடைபெறும்.