ADDED : ஜன 31, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: உசிலம்பட்டி பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஜன.24 இரவு செங்கோட்டை சென்று விட்டு மதுரைக்கு திரும்பியபோது, ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி விலக்கு அருகே டூவீலரில் வந்த, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம், ஜீவானந்தம் ஆகியோர் பஸ்ஸின் முன்னும், பின்னுமாக போக்கு காட்டி ஓட்டியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது.
இதனை டிரைவர் பாலகிருஷ்ணன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பின்பக்க கண்ணாடியில் கல் வீசி உடைத்து விட்டு தப்பி சென்றனர். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

