ADDED : பிப் 17, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: முதல்வர் இல்ல முற்றுகை செய்ய இருந்த சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததை கண்டித்து விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க வளாக கிளை செயலாளர் சரவணச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினர்.