நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலைக்கல்லுாரியில் 24வது பட்டமளிப்பு விழா நடந்தது.
முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கல்விக் குழுமங்களின் தலைவர் ஸ்ரீதரன் மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலை தேர்வு தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 9 மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களையும் வழங்கி பேசினார்.
கல்லுாரி செயலாளர் டாக்டர் அறிவழகி பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய தொடர்ந்து கடின உழைப்புடன் படிக்க வேண்டும், என்றார். ஏற்பாடுகளை துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

