sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

/

காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடி தீவிரம்

காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடி தீவிரம்


ADDED : நவ 24, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காரியாபட்டி எஸ்.மறைகுளம், தேனூர், உவர்குளம், சூரனூர், சித்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் அதிக அளவில் நடைபெறும். இப்பகுதியில் இரு போகம் விவசாயம் செய்து வருகின்றனர். காலத்தில் கடலை, பருத்தி, வெங்காயம், துவரை, பாசி பயிறு வகைகள் அதிக அளவில் பயிரிடுவர். கோடையில் வெங்காயம் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நீர் நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. வயல்களில் நெல் நடவை முடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மானாவாரி நிலங்களில் நல்ல ஈரப்பதம் இருந்ததால் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தனக்குமார், விவசாயி, எஸ். மறைக்குளம்: இப்பகுதியில் அதிக அளவில் மானாவாரியாக நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலை செடிகள் நன்கு முளைத்துள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருக்கும் என்கிற நம்பிக்கையில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us