sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

/

ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு

ஊருணியில் ஆகாயத் தாமரை கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு


ADDED : டிச 17, 2024 03:34 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி விடத்தகுளம் கோயில் ஊருணியில் கழிவு நீர் கலப்பதுடன், ஆகாயத்தாமரை வளர்ந்து அசுத்தமாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

நரிக்குடி விடத்தகுளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மந்தையில் கோயில் ஊருணி உள்ளது. சமீபத்தில் பெய்த பருவ மழைக்கு தண்ணீர் வந்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிரம்பியதால் அசுத்தமானது.

அத்துடன் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளதால் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. ஊருணியைச் சுற்றி கோயில், பள்ளிக்கூடம், குடியிருப்புகள், ஊராட்சி அலுவலகம் இருப்பதால் எப்போதும் மக்கள் கூடும் இடமாக உள்ளது. துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளது.

ஆட்கள் குளிக்க முடியவில்லை. உடலில் அரிப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஊருணியில் குளித்து விளையாடுவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. கால்நடைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. சுகாதாரக் கேட்டால் அப்பகுதியில் மக்கள் குடியிருக்க சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us