sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் பலத்த காற்றுடன் கனமழை

/

விருதுநகரில் பலத்த காற்றுடன் கனமழை

விருதுநகரில் பலத்த காற்றுடன் கனமழை

விருதுநகரில் பலத்த காற்றுடன் கனமழை


ADDED : ஏப் 06, 2025 06:27 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏப். 2ல் 157.10 மி.மீ., ஏப். 3ல் 180 மி.மீ., மழை பதிவானது.

நேற்று முன்தினம் மழையின்றி வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்றும் பகல் முழுதும் விருதுநகரில் வெயில் வாட்டியது. மாலை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

பின் இடி, மின்னல், பலத்த காற்றுடன் சுமார் 2:00 மணி நேரத்திற்கும் மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. சிவகாசி திருத்தங்கலில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.






      Dinamalar
      Follow us