நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தவறவிடும் பொருட்களை மீண்டும் கல்லுாரி முதல்வரிடம் கடந்தாண்டு ஒப்படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 26 பேருக்கு நேர்மையாளர் விருதை செயலாளர் மகேஷ் பாபு வழங்கினார்.
இதில் தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

