sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

/

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்

கர்ப்பிணிகளிடம் லஞ்சம் மருத்துவமனை பணியாளர் டிஸ்மிஸ்


ADDED : பிப் 06, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணிகளிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரில் மருத்துவமனை தற்காலிக பணியாளர் விஜயலட்சுமியை டிஸ்மிஸ் செய்து விருதுநகர் மருத்துவ துறை நலப்பணிகள் இணை இயக்குனர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிகளிடம் பிரசவத்தின் போது லஞ்சம் கேட்பதாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.இதனையடுத்து துறை ரீதியாக விசாரணை நடந்தது. இதில் தற்காலிக பணியாளர் விஜயலட்சுமி லஞ்சம் பெறுவது நிருபணமாகியது.

இதனையடுத்து அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து விருதுநகர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு பெண் ஊழியர் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us