/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல் குளம் அகழாய்வில் மனித தலை உருவம் கண்டெடுப்பு
/
விஜயகரிசல் குளம் அகழாய்வில் மனித தலை உருவம் கண்டெடுப்பு
விஜயகரிசல் குளம் அகழாய்வில் மனித தலை உருவம் கண்டெடுப்பு
விஜயகரிசல் குளம் அகழாய்வில் மனித தலை உருவம் கண்டெடுப்பு
ADDED : டிச 26, 2024 01:09 AM

சிவகாசி,:   விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை உருவம்,  செவ்வந்திக் கல் மணிகள், சுடுமண்ணாலான  பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி  கண்டெடுக்கப்பட்டது.
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை,  வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 2900 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை உருவம் கிடைத்துள்ளது.
“கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
அந்த வகையில், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை,  நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன.
மேலும், சுடுமண்ணாலான  பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது.
இது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

