/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தொடரும் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு
/
வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தொடரும் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு
வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தொடரும் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு
வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தொடரும் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு
ADDED : மார் 01, 2024 12:02 AM
சிவகாசி, - சிவகாசி அருகே கீழ திருத்தங்கல், செங்கமலப் பட்டியில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன.
சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாகவும் சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். குறிப்பாக கீழ திருத்தங்கல் செங்கமலபட்டியில் வீடுகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கின்றனர்.
இங்கு எந்தவித பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. பட்டாசு தயாரிப்பது மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்கும். இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.
கடந்த காலங்களில் சாத்துார் அருகே அச்சன்குளம் பட்டாசு கடையில் சட்டவிரோதமாக செட் அமைத்து பட்டாசு தயாரித்த போது, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்திலும் சாத்தூரில் வீட்டில் பட்டாசு தயாரித்த ஒருவர் வெடி விபத்தில் உயிரிழந்தார். குடியிருப்புப் பகுதிகளில் வெடி விபத்து ஏற்பட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீதும் பட்டாசுகளை பதுக்குபவர்கள் மீதும் போலீசார், வருவாய்த்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், விதிமீறல் தொடர் கதையாகவே உள்ளது.

