sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செங்கமலநாச்சியார்புரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

/

செங்கமலநாச்சியார்புரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

செங்கமலநாச்சியார்புரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

செங்கமலநாச்சியார்புரத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்


ADDED : நவ 03, 2024 04:36 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரத்தில் மெயின் ரோடுகளில் ஆக்கிரமிப்பு உள்ளதால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணி நடந்து வரும் நிலையில் இந்த ரோடுகள் மாற்றுப்பாதையாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் படத்தில் திருத்தங்கல் ரோடு, சிவகாசிரோடு, பழைய வெள்ளையாபுரம் ரோடு என மூன்று சந்திப்பு உள்ளது. இந்த மூன்று ரோடுகளிலும் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் செங்கமல நாச்சியார்புரம் ரோடு முக்கிய மாற்று பாதையாக உள்ளது இந்த ரோட்டில் கனரக வாகனங்கள், நகர் பஸ்கள் பள்ளி கல்லுாரி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

இயல்பாகவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், தற்போது அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றது. இந்நிலையில் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மேலும் வளைவுப் பகுதி வேறு என்பதால் எளிதில் வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us