/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 27, 2024 04:21 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தல், ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை 9:30 மணிக்கு தேரடி முன்பு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி கவிதா, டி.எஸ்.பி.ராஜா, மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் ராக்கப்பன், நித்யா, செல்வகுமார், ரோட்டரி நிர்வாகிகள் ஜெகநாதன், முத்துராமலிங்க குமார், ஜெயராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தை நீதிபதி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நான்கு ரத வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் வலம் வந்தது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர்.
*இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்திய அரசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர நல அலுவலர் சரோஜா முன்னிலை வைத்தார். மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சிவகாசி சாட்சியாபுரம் சி.எம்.எஸ்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டி.எஸ்.பி.,பாஸ்கர் தலைமையில் மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பாண்டியராஜன் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.