sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தை பற்றிய தகவல்கள் டிஸ்ப்ளேயில் அறிவிப்பு

/

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தை பற்றிய தகவல்கள் டிஸ்ப்ளேயில் அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தை பற்றிய தகவல்கள் டிஸ்ப்ளேயில் அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தை பற்றிய தகவல்கள் டிஸ்ப்ளேயில் அறிவிப்பு


ADDED : மார் 16, 2025 06:53 AM

Google News

ADDED : மார் 16, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி விபரங்களை உறவினர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள டிஸ்ப்ளே வசதி செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகள் இங்கு இருந்தாலும் கூடுதலாக பிறக்கும் குழந்தையின் விபரத்தை அவர்களின் உறவினர்கள் உடனடியாக தெரிந்து கொள்ள பார்வையாளர் அறையில் டிஸ்பிளே வசதி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்ணிற்கு குழந்தை பிறந்தவுடன், தாய், தந்தை பெயர், குழந்தை ஆணா, பெண்ணா, ஊர், பிறந்த நேரம், எடை உள்ளிட்ட விபரங்கள் டிஸ்பிளேயில் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்திலேயே முதல் முறையாக இவ்வசதி இங்குதான் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிரசவ அறையிலிருந்து செவிலியர் வந்து சொல்லும் வரை திக்..திக்..திக்.. மன நிலையில் இருக்கும் உறவினர்களுக்கு இந்த டிஸ்பிளே அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கோவன், மருத்துவ அதிகாரி: இந்த டிஸ்ப்ளே மூலம் குழந்தையை பற்றி உடனடியாக குடும்பத்தார் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தகவல் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us