/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நன்கொடை புத்தகங்களை வழங்கும் பணி துவக்கம்
/
நன்கொடை புத்தகங்களை வழங்கும் பணி துவக்கம்
ADDED : நவ 13, 2024 07:28 AM
விருதுநகர் ; விருதுநகர் 3வது புத்தகத் திருவிழாவில் நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்களை மாணவர்கள், போட்டி தேர்வர்கள், நுாலகங்களுக்கும் வழங்கும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செப். 27 முதல் அக். 10 வரை 3வது புத்தகத் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு தரப்புகளிடம் ரூ.11 லட்சத்திற்கு 9450 புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட புத்தகங்களில், 334 புத்தகங்கள் நூலகங்களுக்கும், 500 புத்தகங்கள் போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும், 8616 புத்தகங்கள் 11 ஒன்றியங்களில் 9 முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக வழங்கும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.