ADDED : ஆக 13, 2025 02:01 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
டீன் கல்பனா வரவேற்றார். வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்து பொறியியல் துறையில் உங்கள் எதிர்காலத்திற்கான காரணிகள், நோக்கம், ஆர்வம், முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசினார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சுரேஷ் குமார், கோட்டி அமர்நாத் ரெட்டி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
