sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அறுவடை தானியங்களை நிர்ணயித்த ஈரப்பதத்தில் சேமிக்க அறிவுறுத்தல்

/

அறுவடை தானியங்களை நிர்ணயித்த ஈரப்பதத்தில் சேமிக்க அறிவுறுத்தல்

அறுவடை தானியங்களை நிர்ணயித்த ஈரப்பதத்தில் சேமிக்க அறிவுறுத்தல்

அறுவடை தானியங்களை நிர்ணயித்த ஈரப்பதத்தில் சேமிக்க அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 20, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: மாவட்டத்தில் தற்போது கோடை பருவ நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் விதையை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவிற்குள் சேமித்து வைக்க வேண்டும் என மதுரை விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, விருதுநகர் வேளாண் அலுவலர் சாய்லட்சுமி சரண்யா ஆகியோர் கூறினர்.

அவர்களது செய்திக்குறிப்பு: விதை ஈரப்பதம் என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது.

விதை ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதை கெடுதல், பூச்சி தாக்குதல், அதிகபட்ச சேமிப்பு காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதம் மிக அதிகம் இருந்தால் முளைப்புத் திறன், சேமிப்புக்கான கால அளவு குறைதல், பூஞ்சாணம், பூச்சி தாக்குதல் ஆகிவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதை தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும்.

நெல் பயிருக்கு 13 சதவீதமும், சிறுதானியங்களுக்கு 12 சதவீதமும், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, எள்பயிர்களுக்கு 9 சதவீதமும், பருத்திக்கு 10 சதவீதமும் விதை பயன்பாட்டிற்கு அதிக பட்ச ஈரப்பதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை பருவ நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் விதையை நன்கு உலர்த்தி ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவிற்குள் சேமித்து வைக்க வேண்டும்.

விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறனை அறிந்து கொள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us