sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பணியிடங்களில் பாலியல் புகார் அளிக்க உள்ளக குழு அவசியம் தொழிலக இணை இயக்குனர் அறிவுரை

/

பணியிடங்களில் பாலியல் புகார் அளிக்க உள்ளக குழு அவசியம் தொழிலக இணை இயக்குனர் அறிவுரை

பணியிடங்களில் பாலியல் புகார் அளிக்க உள்ளக குழு அவசியம் தொழிலக இணை இயக்குனர் அறிவுரை

பணியிடங்களில் பாலியல் புகார் அளிக்க உள்ளக குழு அவசியம் தொழிலக இணை இயக்குனர் அறிவுரை


ADDED : ஜூலை 21, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி,: மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் அளிக்க உள்ளக குழு அமைக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் இணை இயக்குனர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணவும் பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் அனைத்து பணி இடங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயம்.

இச்சட்டத்தின்கீழ் வேலை அளிப்பதற்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் அந்த வேலை அளிப்பவர் மீது ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் வேலை அளிப்பவர்களால் உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.

இச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உள்ளக புகார் குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடத்தில் அனைத்து பணியாளர்களும் தெளிவாக காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us