sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 காலி மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

/

 காலி மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

 காலி மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

 காலி மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி


ADDED : டிச 06, 2025 02:17 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: ''காலி மது பாட்டில்களை திரும்ப பெற அவுட்சோர்சிங் முறையில் புதியதாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் ''என, தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.வி.ராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர் களிடம் இருந்து காலி மது பாட்டில்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரூ. 10 திரும்ப வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை விற்பனையாளர்களே செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் விற்பனையாளர்கள் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவுட்சோர்சிங் முறையில் புதியதாக ஆட்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் இந்த திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

காலி மது பாட்டில்களை வைப்பதற்கு போதுமான இடவசதியும் கடைகளில் இல்லை. எனவே மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி விருதுநகர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்டிச. 8ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us