sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை கண்காணிப்பது அவசியம்! மேலாண்மை குழுவில் நடத்துவது போல்  இதற்கும் கூட்டம்

/

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை கண்காணிப்பது அவசியம்! மேலாண்மை குழுவில் நடத்துவது போல்  இதற்கும் கூட்டம்

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை கண்காணிப்பது அவசியம்! மேலாண்மை குழுவில் நடத்துவது போல்  இதற்கும் கூட்டம்

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை கண்காணிப்பது அவசியம்! மேலாண்மை குழுவில் நடத்துவது போல்  இதற்கும் கூட்டம்


ADDED : பிப் 05, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் 2023ல் ஒரு பள்ளியில் புகுந்து ஆசிரியரை, இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை ஏற்படுத்த அப்போதைய சி.இ.ஓ., வளர்மதி உத்தரவிட்டிருந்தார். மாணவர்கள் ஜாதி தொடர்பாக சமூக வலைத்தளங்களை பதிவிடுவது, போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு கமிட்டிகள் முழுவீச்சில் செயல்படுவதும், கூட்டங்கள் நடத்தி கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தில் 2023 டிச.ல் ஒரு அரசு பள்ளியில் மாணவரை கண்டித்ததற்காக ஆசிரியரை சக மாணவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து ஒழுக்க கமிட்டிகளை தொடர்ந்து ஏற்படுத்த அறிவுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி ஒழுக்க கமிட்டிகளை அமைக்க உத்தரவிட்டார்.

ஏற்கனவே அமைத்த பள்ளிகளில் அதை பலப்படுத்தவும், அமைக்காத பள்ளிகளில் அதை அமைத்து மாணவர்களை நல்வழிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்ட எஸ்.பி., மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பி.டி.எப்.,ஐ அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம் மூலமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகம் மூலமாக மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதற்கு பின் அனைத்து பள்ளிகளும் ஒழுக்க கமிட்டிகளை அமைத்தன. அதற்கு பின் ஜனவரி மாதம் வரவே அதற்கு பின் செய்முறை தேர்வு, பொதுத்தேர்வு என மாணவர்கள் அடுத்த படிப்புக்கு சென்று விட்டனர்.

2023-24 பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.51, பிளஸ் 2 தேர்வில் 89.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது. தேர்ச்சி அடையாத மாணவர்களின் அடுத்தகட்ட உயர்கல்வி வாய்ப்பு குறைகிறது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, 2 வகுப்புகளில் மாணவர்களின் நன்னடத்தை, அவர்களது புற சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டியது பள்ளிக்கல்வித்துறை கடமை.

மாணவர்கள் சமூக வலைத்தள ரீல்ஸ்களில் பள்ளி சீருடையில் வீடியோ வெளியிடுவது, ஜாதி தொடர்பாக பேசுவது சிக்கலான பிரச்னையாக மாறி உள்ளது. ஒழுக்க கமிட்டிகளை பலப்படுத்தி இதை தடுக்க வேண்டும். அதற்கு மேலாண்மை குழுக்களுக்கு முக்கியத்துவம் தந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டங்கள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துவது போல், ஒழுக்க கமிட்டியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us