sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்

/

சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்

சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்

சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்


ADDED : மார் 17, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் தொடர்ந்து சாக்கடை கலந்து வருவதால் வற்றாத சாக்கடை ஆறாக மாறிவருகிறது.

வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு துாத்துக்குடி மாவட்டம் வேம்பாறு அருகே கடலில் கலக்கிறது.

துாய நீராக பிறப்பெடுத்து வரும் வைப்பாற்றில் வெம்பக்கோட்டை ஊராட்சி தொடங்கி சாத்துார் நகராட்சி வரை உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவு நீர் முழுவதுமாக கலந்து வருகிறது.

ஊராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வைப்பாறு நதி சாக்கடை ஆறாக மாறிவிட்டது.

இந்த நதியில் சங்கரநத்தம் செக்டேம், சாத்துார் செக்டேம், பெரிய கொல்லப்பட்டி செக் டேம், நாகலாபுரம் செக்டேம்கள் உள்ளன.

இவற்றில் அதிக அளவில் கழிவு நீரே தேங்கி நிற்கிறது.

இதனால் சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைந்து வருகிறது.

தற்போது கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் சிறிய அளவில் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் ஆறுகளில் தொடர்ந்து கலந்து வரும் சாக்கடை கழிவு நீர் காரணமாக கிணற்றில் தண்ணீரின் தன்மை மாறுபட்டு கிணற்று பாசனம் மூலம் நடைபெறும் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆற்றில் நேரடியாக சாக்கடை கலந்து வரும் இடங்களை பொதுப்பணித்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாக்கடையை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்






      Dinamalar
      Follow us