ADDED : பிப் 15, 2025 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்கம் கருப்பையா, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முத்தையா, தமிழக ஆசிரியர் கூட்டணி பாலச்சந்திரன், சமூகநலத்துறை அலுவலர் சங்கம் மாநில பொருளாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

