sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக்கிரமிப்பில் காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு

/

ஆக்கிரமிப்பில் காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு

ஆக்கிரமிப்பில் காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு

ஆக்கிரமிப்பில் காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு


ADDED : ஜன 31, 2024 12:03 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

காரியாபட்டியில் ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, எம்.எல்.ஏ., அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பயணியர் விடுதி என பல்வேறு அலுவலகங்கள் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியே அலுவலகங்களுக்கு செல்ல 50 அடி அகலம் ரோடு உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.

எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அவ்வப்போது கட்சியினர் கார்களில் வருவர். உழவர் சந்தைக்கு ஏராளமான வாடிக்கையாளர்களும், நெடுஞ்சாலைத்துறை, பயணியர் விடுதி உள்ளிட்டவற்றிற்கு மக்கள் அதிகளவில் வந்து செல்வர். மேலும் அச்சம்பட்டி பகுதிக்கு செல்ல இந்த ரோட்டைத் தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்த ரோட்டை வாகன ஸ்டாண்ட் போல் பலர் டூவீலர்களை நிறுத்தி விட்டு வெளியூர்களுக்கு செல்வதாலும், ரோட்டோர காய்கறி கடைகளை வைத்தும் வணிக வளாக கடை வைத்திருப்போர் பாதி ரோட்டை ஆக்கிரமித்தும் உள்ளனர். இதனால் 50 அடி ரோடு, 10 அடி ரோடாக சுருங்கியது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள், ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் இந்த ரோட்டை கடக்க படாத பாடு படுகின்றனர். ஏற்கனவே இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு இங்கு இருந்த ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்தினர். வணிக வளாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இதையடுத்து போட்டி போட்டுக் கொண்டு மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே ஆக்கிரமிப் புகளை முழுமையாக அகற்றி, போக்குவரத்திற்கு பிரச்னையின்றி இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us