ADDED : அக் 19, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக யூனிட் ரத்ததானம் செய்த குருதி கொடையாளர்களுக்கான பாராட்டு விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் விருதுநகரில் சிறப்பாக ரத்ததானம் செய்ததற்காக மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர்செல்வத்திற்குபாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

