ADDED : ஜன 27, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், ; விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் 3ம் ஆண்டு கணினி பொறியியல் துறையை சேர்ந்த திரிஷா, 2ம் ஆண்டு இயந்திர பொறியியல் துறை தனுஷ் ஆகிய மாணவர்கள் புது டில்லியில் சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் பிரதமர் மோடி முன்னிலையில் நடக்கும் ஊர்வலத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
அவர்களை கல்லுாரி தலைவர் பெரிசாமி, செயலாளர் தர்மராஜன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில், பேராசிரியர்கள் பராட்டினர்.

