sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவி உணவு பாதுகாப்பு அலுவலர் குமுறல்

/

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவி உணவு பாதுகாப்பு அலுவலர் குமுறல்

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவி உணவு பாதுகாப்பு அலுவலர் குமுறல்

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவி உணவு பாதுகாப்பு அலுவலர் குமுறல்


ADDED : செப் 24, 2025 02:45 AM

Google News

ADDED : செப் 24, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:'' 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில்பணிபுரிவதால் மாவட்ட நியமன அலுவலர் பதவி உயர்வு வழங்க கோரி சென்னையில் அக். 7ல் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது , என தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கமாநில பொதுச்செயலாளர் முருகேசன் கூறினார்.

அவர் கூறியதாவது: உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து உணவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டோம். இச்சட்டம்2011 ஆக. 5 முதல் உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டம், விதிகளாக மாற்றப்பட்டது. இதன் பயிற்சியும் முடித்ததால் உணவு ஆய்வாளர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுஉணவு பாதுகாப்பு அலுவலர்களாக அறிவிக்கப்பட்டோம். தமிழக அளவில் 310 பேர் உள்ளோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிகிறோம்.

உணவு மாதிரி எடுத்தல், தடை உணவு விற்பனையை கண்காணித்தல், அதை பறிமுதல் செய்து அழித்தல், வழக்கு பதிவு, சிறை, அபராதம் பெற்று தருதல், விழிப்புணர்வு ஏற்படுத்துவது, செயலி புகார் மீது நடவடிக்கை எடுத்தல் போன்றவை எங்கள் பணி. ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் 3 கட்ட பதவி உயர்வாவது பெறுவது வழக்கம். ஆனால் எங்களுக்கு இன்றுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறை மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் 2011 -15 வரையிலான காலத்திற்கு 75 அலுவலர்களுக்கு ஊதிய வரன்முறை வழங்க வேண்டும் என்றும் 2022 சங்க மாநில மாநாட்டில் கோரிக்கை வைத்தோம்.

அதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்றும், சட்டத்திற்கு உட்பட்டது என்றும் இது குறித்து அரசு விரைவில் முடிவெடுத்து பதவி உயர்வு வழங்கும் என அறிவித்தார். அளித்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் அக். 7ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us