ADDED : ஆக 09, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தனர்.
இருக்கன்குடி நத்தத்துப்பட்டி கலிங்க மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.