sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளைநிலங்களில் சாய்ந்த நிலை மின்கம்பங்கள்

/

விளைநிலங்களில் சாய்ந்த நிலை மின்கம்பங்கள்

விளைநிலங்களில் சாய்ந்த நிலை மின்கம்பங்கள்

விளைநிலங்களில் சாய்ந்த நிலை மின்கம்பங்கள்


ADDED : நவ 14, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி., ரெட்டியபட்டி பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி., ரெட்டியபட்டி பகுதியில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இப்பகுதியில் விவசாயப் பணிகள் துவங்கியுள்ளது.

அதன்படி விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த விவசாய நிலங்களின் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. பெரிய மழை பெய்யும் போது சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை செய்கின்றனர்.

விவசாய பணிகள் நடக்கும் போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us