sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பம்

/

விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பம்

விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பம்

விளைநிலத்தில் சாய்ந்த மின் கம்பம்


ADDED : ஜன 10, 2024 12:09 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே இந்த மின்கம்பங்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் விளைநிலங்களில் இலவச மின்சாரத்திற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை நட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது அவை சரிந்து வருகின்றன.

சில மின்கம்பங்கள் வரப்பை ஒட்டி இருப்பதால் நீரோட்டம் காரணமாகவும் சரிந்து வருகின்றன. கால்நடை, மனிதன் என ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு தான் இழப்பு ஏற்படும்.

இன்னொரு பக்கம் திருச்சுழி, நரிக்குடி போன்ற வறண்ட கண்மாய்களில் மேடான பகுதிகளிலும் இதே போல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 மாதங்களாக பெய்து வரும் கனமழையால் பல கண்மாய்கள் நிரம்பி உள்ளன.

இவற்றிலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. கடந்தாண்டு ராஜபாளையத்தில் கண்மாயில் மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்தது. மின் வினியோகம் இல்லாததால் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.

மாவட்ட மின்வாரியம் இதற்கென தனிக்குழு அமைத்து விளைநிலங்கள், நீர்நிலைகளில் வரும் மின்கம்பங்களை கண்டறிந்து அதன் பாதிப்பு தன்மையை ஆராய வேண்டும்.

சரிந்துள்ள மின்கம்பங்களை பலப்படுத்தி நேராக்கவும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்களில் வேறு பாதைகளில் நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us