ADDED : பிப் 09, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 1847 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கியின் மூலம் ரூ. 90.66 கோடி கடனுதவியை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து வழங்கி பேசினார்.
அவர் மேலும் கூறியதாவது: பணத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவி குழு போன்ற அமைப்புகள் பெண்கள் பல தொழில்களை துவங்குவதற்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் பெண்கள் மாதம் குறைந்தது ரூ. 20 ஆயிரம் சம்பாதிக்கக்கூடிய அளவிற்கு வளர்வது குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும், என்றார்.

