sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்

/

மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்

மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்

மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்


ADDED : அக் 30, 2025 03:33 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக மக்காச்சோள பயிருக்கான ஐப்பசி பட்ட விதை நடவு தீவிரமடைந்துள்ளது.

மாவட்டத்தில் 37 ஆயிரம் எக்டேர் மக்காசோளம் பயிரிடப்பட்டு வருகிறது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் அந்த நகரங்களின் கிழக்கு பகுதி கிராமங்களிலும், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் பருவ மழையை நம்பி பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டும் வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் ஐப்பசி பட்ட நடவிற்காக நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தவர்கள், தற்போது விதை நடவு செய்ய துவங்கி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றிய பகுதிகள் ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், இருக்கன்குடி, பாலவனத்தம், பந்தல்குடி, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர், விருதுநகர், எரிச்சநத்தம், அழகாபுரி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் பெரிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் இருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருகிறது.






      Dinamalar
      Follow us