ADDED : மார் 22, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் ஜமாத் தலைவர் சம்சுதீனுக்கும் 75, அதே ஊரைச் சேர்ந்த அப்துல் ஹக் என்பவருக்கும் சொத்து விற்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு நடந்தது.
இந்நிலையில் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்த சம்சுதீனை அப்துல் ஹக் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் சம்சுதீன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரசோழன் போலீசார் அப்துல் ஹக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.