/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடத்தையில் சந்தேகமுற்று மனைவியை கொன்றவர் கைது
/
நடத்தையில் சந்தேகமுற்று மனைவியை கொன்றவர் கைது
ADDED : ஜன 06, 2025 03:24 AM
வத்திராயிருப்பு,: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கோட்டையூரில் அலைபேசியில் அடிக்கடி பேசியதால் நடத்தையில் சந்தேகமுற்று கரண்டியால் தலையில் தாக்கி மனைவியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு தாலுகா கோட்டையூர் மேற்கு காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 26. இவர் மினிவேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். அதே ஊர் கிழக்கு காலனியைச் சேர்ந்த ராஜாத்தியை 22, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவி அடிக்கடி அலைபேசியில் பேசியதால் நடத்தையில் பார்த்திபன் சந்தேகப்பட்டார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு இப்பிரச்னையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பார்த்திபன் கரண்டியால் தாக்கியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயமடைந்தார்.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் பரிசோதித்து இறந்ததாக தெரிவித்தனர். பார்த்திபனை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

