/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
/
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜன 26, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜாசிங் 51. இவர் பெரிய பள்ளிவாசல் தெருவில் சந்திரா நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இப்பள்ளியின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு கடந்தாண்டு நவ. 19ல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஆனால் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் ஓசூரைச் சேர்ந்த முத்துக்குமார் 41, என தெரிந்தது. இவரை கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

