/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா
/
மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா
ADDED : மார் 16, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி; திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வழிபட்டனர்.
மாரியம்மன் கோயிலில் மார்ச் 6ல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மன் வெள்ளி, மயில், ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. நேற்று பொங்கல் விழா நடந்தது.
பெண்கள் அம்மனுக்கு பொங்கல் இட்டு மாவிளக்கு ஏற்றினர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பாதம் வைத்தும், கண் மலர் செலுத்தி வழிபட்டனர்.
திருச்சுழி சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.