sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டிசம்பரில் கோமாரி நோய் தடுப்பூசி

/

டிசம்பரில் கோமாரி நோய் தடுப்பூசி

டிசம்பரில் கோமாரி நோய் தடுப்பூசி

டிசம்பரில் கோமாரி நோய் தடுப்பூசி


ADDED : நவ 22, 2024 03:44 AM

Google News

ADDED : நவ 22, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிசம்பரில் துவங்கவும், கணக்கெடுப்பு பணிகளுடன் இணைத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கால்நடைகளை தாக்கும் நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உண்டாகியுள்ளது.

நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான மருத்துவ சேவைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மாடுகளுக்கு வாய், கால், மடியில் கொப்புளங்கள், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைதல், கன்றுகள் இறப்பு, சினைப்பிடிக்காதிருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக காணப்படுகிறது.

நோய்பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவையான கால்நடைகளுக்கு மருந்துகள் செலுத்தப்படுகிறது.

மேலும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் டிசம்பரில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை கணக்கெடுப்பு அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடக்கும் என்பதால் தடுப்பூசி பணிகளை இணைத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us