sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

/

அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்


ADDED : டிச 27, 2024 04:35 AM

Google News

ADDED : டிச 27, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் ரதவீதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதி ரத வீதியில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை டிரான்ஸ்பார்மர் ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதில் காலியான சிரிஞ்ச், மருந்து அட்டைகள், டப்பாக்கள், பஞ்சுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மருத்துவக் கழிவுகளை உரிய பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதி. இதைவிடுத்து ரோடு ஓரங்களில் கொட்டி செல்வதை நகராட்சி சுகாதார பிரிவும் கண்டு கொள்வதுமில்லை. கண்டிப்பதும் இல்லை.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவது குற்றம்


ராஜமாணிக்கம், கமிஷனர் அருப்புக்கோட்டை நகராட்சி: மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் திறந்த வெளியிலேயே கொட்ட கூடாது.

தனியார் மருத்துவமனைகள் அதை பாதுகாப்பாக வைத்திருந்து அதற்கு என வரும் வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும்.

சொக்கலிங்கபுரம் ரத வீதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடப்படும். இனி இது போன்று தவறுகள் நடக்காத வகையில் கண்காணிப்பு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us