sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

/

புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்


ADDED : டிச 07, 2024 10:09 PM

Google News

ADDED : டிச 07, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி:''புயல் நிவாரணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும்'' என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அவர் கூறியதாவது:

மத்திய அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக தன்னுடைய பங்களிப்பாக ரூ. 944 கோடியை தமிழகத்திற்கு விடுவித்தது. அந்த நிதி குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது. 15வது நிதிக் குழு பரிந்துரைப்படி சட்டப்பூர்வமாக விடுவிக்கக் கூடிய நிதிதான் இது. 2022 --- 23ம் ஆண்டில் பேரிடர் நிதியாக ரூ. ஆயிரத்து 142 கோடி விடுவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.856.5 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.285.5 கோடி.

அதேபோல் 2023 - -24ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.ஆயிரத்து 200 கோடியில் மத்திய அரசின் பங்கு ரூ.900 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.300 கோடி. 2024--25ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.945 கோடியில் ரூ.315 கோடி மாநில அரசின் பங்கு. இந்த தொகை ஜூன் மாதத்தில் விடுவிக்க வேண்டும். தற்போது தாமதமாக விடுவித்தார்கள். பெஞ்சல் புயலுக்கு கூடுதல் நிவாரண நிதி கோரினோம். மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 பேரிடர் நிகழ்ந்தது.

அப்போது மத்திய அரசிடம் ரூ 37,906 கோடி கேட்கப்பட்ட நிலையில், வெறும் ரூ.276 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டது. பெஞ்சல் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். ரூ. 6 ஆயிரத்து 675 கோடி புயல் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது. இதனை தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us