/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
ADDED : மார் 24, 2025 06:23 AM
காரியாபட்டி: மல்லாங்கிணரில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா முன்னிலை வகித்தார்.
காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி ஒன்றியங்களைச் சேர்ந்த 104 பெண்களுக்கு ரூ.63 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.42 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவிகள், 75 பயனாளிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி, ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் யுவஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.