sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு

/

குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு


ADDED : அக் 19, 2025 06:03 AM

Google News

ADDED : அக் 19, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி வழங்கும் போர்வெல் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் காய்ச்சலில் அவதிப்படுகின்றனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வடக்குநத்தம் ஊராட்சி . இங்குள்ள ஊருணியிலிருந்து போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

முறையான பராமரிப்பு இல்லாது போனதால் ஊருணியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. 5 ஆண்டுகளாக இருப்பதால், அருகில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் கழிவுநீர் குடிநீருடன் கலந்து விடுகிறது. ஊருணியை பராமரிக்க சொல்லி பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. குடிநீர் நாற்றம் எடுப்பதுடன் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் : பாதுகாப்பான சுகாதார குடிநீர் வழங்கப்படுவது இல்லை. ஊரில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளது. குடிநீர் நாற்றம் எடுப்பதால் குடிக்க பயன்படுத்த முடிவதில்லை. தனியார் இடத்தில் குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறோம். ஊராட்சி எங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us