sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாசி, குப்பை நிறைந்த ஊருணி

/

பாசி, குப்பை நிறைந்த ஊருணி

பாசி, குப்பை நிறைந்த ஊருணி

பாசி, குப்பை நிறைந்த ஊருணி


ADDED : பிப் 18, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவு நீர் தேங்கி பாசி படர்ந்துள்ள ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெம்ப கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் ஊருணி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருணி குளிக்க, துணி துவைக்க என பயன்பாட்டில் இருந்தது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழையில் ஊருணிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் தண்ணீர் வந்தும் பயனில்லாமல் கழிவு நீராக காட்சியளிக்கிறது.

ஏனெனில் ஊருணி முழுவதுமே பாசிப்படர்ந்து காணப்படுகிறது. தவிர குடியிருப்பு, கடைகளின் குப்பைகளும் ஊருணியில்தான் கொட்டப்படுகின்றது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இதனைக் கடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஊருணியை துார்வாரி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us