ADDED : பிப் 18, 2024 12:29 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவு நீர் தேங்கி பாசி படர்ந்துள்ள ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெம்ப கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் ஊருணி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருணி குளிக்க, துணி துவைக்க என பயன்பாட்டில் இருந்தது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழையில் ஊருணிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் தண்ணீர் வந்தும் பயனில்லாமல் கழிவு நீராக காட்சியளிக்கிறது.
ஏனெனில் ஊருணி முழுவதுமே பாசிப்படர்ந்து காணப்படுகிறது. தவிர குடியிருப்பு, கடைகளின் குப்பைகளும் ஊருணியில்தான் கொட்டப்படுகின்றது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இதனைக் கடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஊருணியை துார்வாரி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.