sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

10 வயது சிறுமிக்கு சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது

/

10 வயது சிறுமிக்கு சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது

10 வயது சிறுமிக்கு சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது

10 வயது சிறுமிக்கு சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது


ADDED : ஜன 23, 2025 03:45 AM

Google News

ADDED : ஜன 23, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 10 வயது சிறுமியை கொடுமைப்படுத்தி காலில் சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் மலையடிபட்டியை சேர்ந்தவர் முருகானந்தி 30, ஆடல் பாடல் இசை கச்சேரியில் பணிபுரிகிறார்.

திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் உடன் பணிபுரியும் வேல்ராஜ் 35, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதிலும் ஆறு மாதத்திலும் இரு குழந்தைகள் உள்ளனர்.

முருகானந்தியின் முதல் கணவருக்கு பிறந்த 10 வயது சிறுமிக்கு வேல்ராஜ் கடுமையான வேலைகளை செய்யுமாறு துன்புறுத்தி காலில் சூடு வைத்துள்ளார்.

அப்பகுதி மக்கள் குழந்தை பாதுகாப்புக்கான இலவச எண்ணில் புகார் அளித்தனர்.

சமூக நலத்துறை அலுவலர் இளங்கோ தலைமையில் விசாரணை நடத்தியதில் சிறுமியை துன்புறுத்தி சூடு வைத்தது உறுதியானது.

இதனை அடுத்து ராஜபாளையம் மகளிர் போலீசார் வேல்ராஜை கைது செய்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us