sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்

/

சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்

சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்

சேறும் சகதியுமான தற்காலிக பஸ்ஸ்டாண்ட்


ADDED : நவ 27, 2024 05:34 AM

Google News

ADDED : நவ 27, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் தற்காலிகமாக இயங்கி வரும் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் பஸ் ஏற சிரமப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் உள்ளது. கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இடித்து விட்டு புதிய நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. அதுவரை அருகில் பஸ்கள் வந்து செல்ல தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டது. இது மேடும் பள்ளமுமாக இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து சேறும் சகதியும் ஆக மாறி விடுகிறது.

பயணிகள் பஸ்கள் ஏற சிரமப்படுகின்றனர். பலர் சேற்றில் வழுக்கி விழுந்து உள்ளனர்.

எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளும் மந்த கதியில் நடக்கிறது.

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us