sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : டிச 25, 2024 03:37 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தேசிய பசுமை ஆணைய உத்தரவின் படி, நீராதாரப் பகுதிகளில் குடியிருப்பு கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ரூ.25 கோடி மதிப்பில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மடவார்களாகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் அலுவலகத்தில் இல்லாததால், போர்டிகோவில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.






      Dinamalar
      Follow us