sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமைப்பதில் தாமதம் காட்டும் நகாய் தினம் நடக்கும் விபத்துகள் 

/

வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமைப்பதில் தாமதம் காட்டும் நகாய் தினம் நடக்கும் விபத்துகள் 

வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமைப்பதில் தாமதம் காட்டும் நகாய் தினம் நடக்கும் விபத்துகள் 

வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமைப்பதில் தாமதம் காட்டும் நகாய் தினம் நடக்கும் விபத்துகள் 


ADDED : பிப் 25, 2024 05:54 AM

Google News

ADDED : பிப் 25, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு அமைப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) தாமதித்து வருகிறது. பக்கவாட்டில் உள்ள மண் பாதையில் நீர் ஓட்டம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.

மாவட்டத்தில் மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச்சாலை விருதுநகர், சாத்துார் வழியாக செல்கிறது. இதில் பல இடங்களில் வடிகால் பணிகளும், சர்வீஸ் ரோடு பணிகளும் முழுமை அடையவில்லை. இதனால் மழை பெய்தால் சர்வீஸ் ரோட்டில் மழை நீர் தேங்குவதும், சர்வீஸ் ரோடுகள் இல்லாத பகுதிகளில் மக்கள் எதிர்திசையில் வந்து விபத்தை சந்திப்பதும் அதிகரித்துள்ளது.

அதில் குறிப்பாக வடமலைக்குறிச்சி பிரிவு சர்வீஸ் ரோடு பாலம் அமைப்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் விபத்து நடந்து 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 பருவமழை போதும் வாகன ஓட்டிகள் எதிர்திசையில் வந்து விபத்தில் சிக்கினர்.

இன்று வரை தீர்வு இல்லை. மேலும் சர்வீஸ் ரோடு பாலம் போடப்பட உள்ள பகுதியில் மண் பகுதி வழியாக மக்கள் வந்து செல்கின்றனர்.இருப்பினும் இப்பகுதியில் நீரோட்டம் இருப்பதால் மழை பெய்தால் இந்த பாதையை பயன்படுத்த முடியாது.

சிலர் நான்கு வழிச்சாலை எதிர்புறத்திலும் வந்து செல்கின்றனர். இதற்கு அடுத்த பகுதியில் பாவாலிக்கு செல்லும் பாதையும் உள்ளது. நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் இந்த சர்வீஸ் ரோடு பால பணியை விரைந்து செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us