/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் தேசிய கலை விழா
/
கலசலிங்கம் பல்கலையில் தேசிய கலை விழா
ADDED : பிப் 18, 2025 04:37 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் தேசிய கலை விழா -2025 நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நடிகர்கள் ராணவ், பிரேம்ஜி, ராயன், அனன்யா நாகலா, திவ்யா பாரதி இயக்குனர் கார்த்திக் யோகி, சுமன், ரைட்டர் சந்துரு, அன்பழகன் நிகழ்ச்சிகளை நடத்தினர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேந்தர் ஸ்ரீதரன், நடிகை திவ்ய பாரதி சான்றிதழ்கள், கேடயம் வழங்கினர்.
அதிக போட்டிகளில் வெற்றி பெற்று சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடமும், விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், பிரதீப் கந்தசாமி, ப்ரியா, ஸ்ரீலேகா, மாணவர்கள் செய்திருந்தனர்.

