ADDED : நவ 20, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நகர் காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திரா உருவ படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர் காங்., தலைவர் ஆர்.சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
நாகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன் சக்தி மோகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஏ.டி சங்கர் கணேஷ், புஷ்பம், நகர் துணைத் தலைவர் டைகர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

